சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தி திணிப்பிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதே போல காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், வேலூர், சேலம், கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்